வண்ண வண்ணமாய்க் கொஞ்சம் கம்பன்
---------------------------------------------------------------
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு
அருளிய திருவே
நீல வண்டினம் படிந்து எழ,
வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள்.
பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன
நிகர்ப்பன – காணாய்
ஒழுக்க நெறி என்பது இது என்று அருந்ததிக்கு அறிவித்த லட்சுமியே ! பொன் நிற மலர்களைக்கொண்டவேங்கை மரத்தின் பூங்கிளைகளின் மேல் நீல நிறமான வண்டுக்கூட்டங்கள் உட்கார்ந்து எழுவதால் அக்கிளைகள் கீழே வளைந்து பின் நிமிர்கின்றன. அதனால் பொன்நிற மலர்கள் உதிர்ந்து உன் திருவடிகளை அடைவது, உன்னைத் தொழுவதைப் போல் இருப்பதைப்பார்!
-வையவன்
---------------------------------------------------------------
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு
அருளிய திருவே
நீல வண்டினம் படிந்து எழ,
வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள்.
பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன
நிகர்ப்பன – காணாய்
ஒழுக்க நெறி என்பது இது என்று அருந்ததிக்கு அறிவித்த லட்சுமியே ! பொன் நிற மலர்களைக்கொண்டவேங்கை மரத்தின் பூங்கிளைகளின் மேல் நீல நிறமான வண்டுக்கூட்டங்கள் உட்கார்ந்து எழுவதால் அக்கிளைகள் கீழே வளைந்து பின் நிமிர்கின்றன. அதனால் பொன்நிற மலர்கள் உதிர்ந்து உன் திருவடிகளை அடைவது, உன்னைத் தொழுவதைப் போல் இருப்பதைப்பார்!
-வையவன்